மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) முதல் சீசனின் தொடக்க விழாவை, கோலாகலமாக துவங்கி வைக்க பிரபல நடிகைகள் பங்கு பெற உள்ளனர்.
WPL:
இந்தியாவில் மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) முதல் சீசனை நடத்துவதற்காக பிசிசிஐயானது பல மாதங்களாக திட்டங்களை வகுத்து வந்தது. இதன் படி, ஒவ்வொரு திட்டங்களையும் செயற்படுத்தி, ஏலத்தின் மூலம் WPLலின் 5 அணிகளுக்கான வீராங்கனைகளை தேர்வு செய்து உள்ளது. இதனை தொடர்ந்து, மார்ச் 4ம் தேதி முதல் WPL லீக் நடத்துவதற்கான ஷெடுயூலேயும் தயார் செய்து வைத்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
5 அணிகளை கொண்டு நடத்தப்படும் இந்த தொடர், மார்ச் 4ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள மைதானகளிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. WPLலின் முதல் சீசன் என்பதால், தொடக்க விழா கோலகலமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிரணியை 3 கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மான் சிட்டி…, காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!!
அதாவது, மார்ச் 4ம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கு முன்பு, டி ஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில், கலைநிகழ்ச்சிகளை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிரபல பாடகர் சங்கர் மகாதேவன், ஏபி தில்லான் மற்றும் பாலிவுட் நடிகைகளான கிருதி சனோன், கியாரா அத்வானி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.