குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
WPL:
மும்பை இந்தியன்ஸ் அணியானது, மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளில் ஹேலி மேத்யூஸ் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால், யாஸ்திகா பாட்டியாவுடன் இணைந்த நாட் ஸ்கிவர்-பிரண்ட் 2 வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்ந்து அசத்தினர். இவர்களில் யாஸ்திகா பாட்டியா (44), நாட் ஸ்கிவர்-பிரண்ட் (36) ரன்களில் வெளியேற, அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெவிலியன் திரும்பினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (51) அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன் விளைவால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பு 162 ரன்களை எடுத்திருந்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இதனால், குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி கண்டு, பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.