மகளிருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் லோவ்லினா, நிகாத் ஜரீன், நீத்து மற்றும் சவீட்டி பூரா ஆகிய வீராங்கனைகள் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
உலக குத்துச் சண்டை:
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில், மகளிருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில், இந்தியா சார்பாக 12 வீராங்கனைகள் பங்கு பெற்று விளையாடினர். இதில், லோவ்லினா, நிகாத் ஜரீன், நீத்து மற்றும் சவீட்டி பூரா ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் வெவ்வேறு எடை பிரிவுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவர்களில், நீத்து மற்றும் சவீட்டி பூரா, 48 மற்றும் 81 கிலோ எடை பிரிவுக்கான இறுதிப் போட்டியிலும் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தி இருந்தனர். இவர்களை தொடர்ந்து, நேற்று டோக்கியோ ஒலிம்பிக்கின் நாயகியான லோவ்லினா 75 கிலோ எடைப் பிரிவில், ஆஸ்திரேலிய கெய்ட்லின் பார்க்கரை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்த போட்டியில், லோவ்லினா 5-2 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
மேலும், இந்தியாவின் நிகாத் ஜரீன், 50 கிலோ எடை பிரிவில், வியட்நாம் முன்னணி வீராங்கனையான நிகுயென் டாமை எதிர்த்து தங்கம் பதக்கம் வெல்லும் முனைப்பில் போட்டியிட்டார். இந்த போட்டியில், ஆரம்ப முதல் ஆதிக்கம் செலுத்திய, நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம், இந்த உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா 4 தங்கப் பதக்கங்களை வென்று புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.