உலகில் பாதுகாப்பான நகரம் எது தெரியுமா??இதோ முழு விவரம்!!

0

பொருளாதார வளர்ச்சி, மக்களை பாதுகாக்கும் விதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உலகில் மிக பாதுகாப்பான நகரம் எது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது ஓர் ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டது.

துபாய்

உலக மக்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ள நகரம் எது என்றால் அது துபாய் தான் அந்த நகரத்தில் மக்களை கண்கவரும் வகையில் கட்டிடங்கள் அமைந்திருக்கும். மேலும் இரவு நேரங்களில் பெரிய கட்டடங்களில் ஒளிரப்படும் விளக்குகள் அனைத்தும் மிக எளிதாக உலக மக்கள் அனைவரையும் கவர்ந்து விடும். அந்த அளவிற்கு அது அனைவரையும் ஈர்க்கும் தன்மையை பெற்றது. மேலும் கடந்த கொரோனா காலத்தில் கூட மிக முனைப்புடன் செயல்பட்டு வந்தது துபாய்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு சூழ்நிலைகளுக்கேற்ப பல அதிரடியான திட்டங்களை அமல்படுத்தி வந்தனர். இதன் காரணமாக அங்கு கொரோனாவில் இருந்து மக்கள் தக்க முறையில் பாதுகாக்கப்பட்டனர். மேலும் அங்குள்ள சாலை விதிமுறைகள் அனைத்தும் மிக சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அங்குள்ள காவலர்கள் அனைவரும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் மிக சிறப்பாக தங்களது பணிகளை செய்து வருகின்றனர். மேலும் பொருளாதார வளர்ச்சி குறித்தும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு தபால் வாக்குமூலம் தொடக்கம் – நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

தற்போது உலகில் மிக பாதுகாப்பான நாடு எது என்பதை கண்டறிய ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் உலகில் மிக பாதுகாப்பாக கருதப்படும் நாடு துபாய் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் அந்த நாடு சூழ்நிலைகளுக்கேற்ப சிறப்பாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உலக வங்கி வர்த்தக துறை மிக எளிதாக இருக்கும் வகையில் பல அம்சங்கள் அமைத்துள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் அரசு தக்க உதவியை செய்து வருகிறது. இதன் காரணமாக தான் துபாய் பாதுகாப்பான நாடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here