உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி – தங்கம் வென்றார் இந்திய வீரர் பங்கல்!!

0

ஜெர்மனியில் உலகக்கோப்பை குத்துசண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அமித் பங்கல் பைனலுக்கு முன்னேறியிருந்தார். அவர், பைனலில் ஜெர்மனியின் அர்கிஸ்ட்டி டேர்டெரியானுடன் மோத இருந்தார். இந்நிலையில் ஜெர்மனி வீரர் காயத்தை காரணம் காட்டி விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, போட்டியின்றி பங்கல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் உலககோப்பை குத்துச் சண்டை போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆண்களுக்கான 91கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சதீஷ்குமார், பிரான்சின் டிஜாமிலி டினி மொய்ன்செவை 4-1 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தியதை தொடர்ந்து பைனலில் ஜெர்மனியின் நெல்வி டியாபாக்கை சந்திக்க இருந்தார். ஆனால் சதீஷ்குமாருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பைனலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெர்மனி வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஜெர்மனி தங்கத்தையும், இந்தியா வெள்ளியையும் வென்றன.

இந்திய பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்த ஹேசில்வுட் – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்!!

பெண்களுக்கான 57 கிலோ போட்டியில் களம் இறங்கிய இந்திய வீராங்கனை மனீஷா அரை இறுதியில் சக வீராங்கனை சோனியாவை 5-0 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து பைனலுக்குள் அடியெடுத்து வைக்கிறார். இதைபோலவே மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை ஷாக்க்ஷி 4-1 என்ற புள்ளிக்கணக்கில் ஜெர்மனியின் ராமனோ கிராப்பை வென்றதன் மூலம் அவரும் பைனலில் நுழைகிறார். ஆகவே பைனலில் இந்திய வீராங்கனைகளான மனிஷாவும், ஷாக்ஷியும் மோதவிருக்கின்றனர்.

அரை இறுதியில் தோல்வி கண்ட ஹுஸாமுத்தீன் (57கிலோ பிரிவு ), கவுரவ் சோலங்கி (57 கிலோபிரிவு ) பூஜா ராணி (75 கிலோ பிரிவு) ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here