இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை வழங்க மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
நம் நாட்டு மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும், நோயாளிகள் வெளிநாடுகளுக்கு மேல் சிகிச்சைக்கு செல்லப்படுவதை தடுக்கும் விதமாக அமைந்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தார். இதன்படி கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவத்தின் வளர்ச்சி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகள் மட்டும் 260 க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மற்றும் அதன் அருகில் 157 செவிலியர் கல்லூரி போன்ற உன்னதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக மக்களே உஷார்.,அதிகரிக்கும் ஆன்லைன் கொள்ளை! இதெல்லாம் தெரியாம பணம் கட்டாதீங்க!!
மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு மூலம் பலதரப்பட்ட மக்களும் பயன்பெற்று வருகின்றனர். இதன் காரணமாக 80,000 கோடி வரை மிச்சப்படுத்த பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆயுர்வேத மருத்துவத்தை மேம்படுத்தி வருவதாகவும் நிகழ்ச்சியில் எடுத்துரைத்துள்ளார்.