கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்தே பணி செய்யும் வசதியை அடுத்த ஆண்டு வரை கூகுள் நீடித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு முதலே அதிகரித்த கொரோனா தொற்றால் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனைத்து நிறுவனங்களும் அறிவுறுத்தின. இதனால் ஊழியர்களும் நிறுவனத்தின் உத்தரவிற்கேற்ப வீட்டில் இருந்து பணிபுரியும் சூழலுக்கு தங்களை பழக்கப்படுத்தி கொண்டனர்.
இந்த சூழல் சில சாதங்கங்களை கொண்டிருந்தாலும் அதிக வேலைப்பளு, மனஉளைச்சல் போன்ற பாதங்கங்களையும் கொண்டுள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஓரளவுக்கு முடிந்த நிலையில் அலுவலங்கள் திறக்கப்பட்டுள்ளன. பணியாளர்களும் அலுவலத்திற்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் தேடுபொறி நிறுவனமான கூகுள் தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. மேலும் அலுவலகம் வந்து பணியாற்ற விரும்புவர்கள் தகவல் தெரிவித்து விட்டு நேரில் வந்து பணியாற்றலாம் என்று அறிவிப்பு விடுத்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்