பெண்களுக்கான 7-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் தமிழகத்தின் முன்னாள் கால்பந்து வீராங்கனை நிவேதா தாஸ் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து!!
இந்தியாவில் முதல் முறையாக 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த 16 நாடுகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், மொரோக்கோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்கும் வீராங்கனைகளை கால்பந்து வாரியம் அண்மையில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த அணிக்கு உதவி பயிற்சியாளராக தமிழகத்தின் முன்னாள் கால்பந்து வீராங்கனை நிவேதா தாஸை நியமித்துள்ளனர்.
30 வயதான இவர் தனது பள்ளி பருவத்திலேயே பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளார். மேலும் தென் மண்டல அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி சிறந்த வீராங்கனைக்கான தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இவரது விடாமுயற்சியின் மூலம் தற்போது இந்திய கால்பந்து பெண்கள் அணிக்கு உதவி பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.