பட்டப்பகலில் இளம்பெண்ணை கற்பழித்த 4 ரயில்வே ஊழியர்கள் – டெல்லியில் நடந்த பகிர் சம்பவம்!

0
பட்டப்பகலில் இளம்பெண்ணை கற்பழித்த 4 ரயில்வே ஊழியர்கள் - டெல்லியில் நடந்த பகிர் சம்பவம்!

டெல்லி ரயில்வே நிலையத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணை கற்பழித்துள்ளனர். அவர்களை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

பெண் கற்பழிப்பு:

இந்தியாவில் தினமும் எங்காவது ஒரு மூலையிலாவது ஒரு பெண் கற்பழிக்கப்படும் அவல செய்தி வந்துகொண்டு தான் உள்ளது. சட்டங்கள் கடுமையாக்கினால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கணவனை விவாகரத்து செய்து தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு சதீஷ்குமார் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு தொடர்ந்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று தன் மகன் பிறந்தநாளுக்கு இரவு 10.30 மணியளவில் அந்த பெண்மணியை சதீஷ்குமார் அழைத்து உள்ளார்.

அப்பொழுது டெல்லி ரயில் நிலையத்தின் 8-வது மற்றும் 9-வது பிளாட்பாரம் ஓரத்தில் உள்ள குடிசையில் அதிகாலை 3.27 மணியளவில் அந்த பெண்மணியை சதீஷ்குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கற்பழித்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் ரயில்வேயில் மின்துறையில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பெண்மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் டெல்லி ரயில் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here