பீகாரில் பெண்ணிடம் அத்துமீறிய வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு அந்த ஊரில் உள்ள அனைத்து பெண்களின் துணியையும் ஆறு மாதம் துவைத்து சேவை புரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்குவதாக உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடுப்பூசி போடவில்லையா? உங்களுக்கு சாப்பாடு இல்லை – அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல் நிர்வாகிகள் சங்கம்!!
வினோத தீர்ப்பு:
சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும், குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற குற்ற சம்பவங்கள் மிகவும் அதிகமாக காணப்படுகின்றன. இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் மதுபானி என்ற ஊரில் உள்ள ஒரு நபர், தம் அருகில் வசிக்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு அந்த பகுதியின் உள்ளூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
அதாவது, சம்பந்தப்பட்ட அந்த நபர் ஊரில் உள்ள அனைத்து பெண்களின் துணியையும் ஆறு மாத காலத்திற்கு துவைத்து கொடுத்து சேவை புரிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு இது தான் சரியான சவுக்கடி என்று சமூக ஆர்வலர்கள் உள்ளூர் நீதிமன்றத்தின் வினோத நிபந்தனை ஜாமீன் குறித்த தீர்ப்பை பாராட்டியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்