ஆந்திராவில் மூன்று பேரை திருமணம் செய்துகொண்டு பின்னர் அவர்களை ஏமாற்றி பணத்துடன் ஓடிய பெண்ணை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில் குமார். இவருக்கு வயது 29. இவர் தற்போது மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வருகிறார். சென்ற ஆண்டு சுஹாசினி என்ற பெண் ஏடிபி பைனான்ஸ் நிறுவன ஊழியர் எனக்கூறி சுனில் குமாரிடம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு சுனில் குமாரின் பெற்றோர் சுஹாசினிக்கு 20 கிராம் தங்க நகையை வாங்கி கொடுத்துள்ளனர்.பின்னர் சுஹாசினி தனக்கு அவரசரமாக பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். சுனில் குமார் எதற்கு என்று விசாரித்தபோது தனது நெருங்கிய உறவினரின் மருத்துவச்செலவுக்கு பணம் தேவை படுவதாக கூறியுள்ளார் சுஹாசினி. இதனால் சுனில் குமார் சுஹாசினிக்கு 4 லட்சம் ரூபாயை கடனாக அளித்துள்ளார். மேலும், அதே காரணத்தை சொல்லி மாமனாரிடமும் ரூ. 2 லட்சத்தை வாங்கியுள்ளார்.
பின்னர் சுனில்குமாரின் வீட்டார் கடனாக கொடுத்த பணத்தை பற்றி கேட்டதையடுத்து அன்றைய தினமே வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுனில்குமார் சுஹாசினியை பற்றி தெரிந்துகொள்ள அவரது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் சுஹாசினிக்கு ஏற்கனவே நெல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிய வந்ததுள்ளது.
இதையடுத்து சுஹாசினி சுனில் குமாரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு, “உங்களிடமிருந்து கடனாக வாங்கிய பணத்தை விரைவில் திருப்பி கொடுத்து விடுவேன். போலீசில் புகார் அளித்தால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பீர்கள்” என்று மிரட்டியுள்ளார்”. இது போக வேறொருவரை திருமணம் செய்ததற்கான புகைப்படங்களை சுஹாசினி சுனில்குமாருக்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் சுனில்குமாரையும் சேர்த்து மொத்தம் மூன்று பேரை சுஹாசினி திருமணம் செய்திருப்பது சுனில்குமாருக்கு தெரியவந்துள்ளது. சுனில் குமார் போலீசாரிடம் புகார் அளித்ததை தெடர்ந்து, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்