திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கணவர் தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தினார் என்று பெண் ஒருவர் தீக்குளித்து உயிழந்துள்ளார்.
ஒரு வாரம் முன்பு திருமணம்:
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வேலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த சந்திரலேகா என்பவருக்கும் பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பாலாஜி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார். கடந்த 30 ஆம் தேதி அவரது மனைவி சந்திரலேகா வீட்டின் குளியல் அறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீசில் புகார்:
இதனால் சந்தர்லேகாவின் பெற்றோர் பாலாஜி மீது புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பாலாஜியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களது வீட்டில் சோதனையும் இட்டனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதில் சந்தேரலேகா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதில் சந்திரலேகா மனம் குமுறி எழுதியுள்ளார் என்று தெரிகிறது.
சந்திரலேகாவின் கடிதம்:
அவர் அதில் “நான் என் திருமண வாழ்க்கையை சந்தோசமாக தான் ஏற்றுக்கொண்டேன் ஆனால், எனக்கு அது அமையவில்லை. திருமணமான முதலிரவு அன்றே என் கணவர் பாலாஜி என்னை சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார். உடல் நிலை சரி இல்லை என்று சொன்னால் கூட என் முன் வாழ்க்கையை பற்றி கேட்டு கொடுமை செய்தார்.
பாத வெடிப்புகளை எளிமையான முறையில் நீக்க வழிமுறைகள்!!
“வேறு ஒருவனை காதலித்து என்னை விட்டு சென்று விடுவாயா?? என்பது போன்ற வார்த்தைகளை கேட்டு என்னை காயப்படுத்தினார். தகாத வார்த்தைகள் கூறியும் என்னை திட்டியுள்ளார். இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் தங்கைகளுக்காவது நல்ல வரனை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.