குடிபோதையில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட பெண் – 14 நாட்கள் சிறைதண்டனை!!

0

சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலையில் சனிக்கிழமை அன்று போக்குவரத்துக்கு காவலர்கள், வாகன தணிக்கை குழு இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் வந்த காமினி என்ற பெண் மற்றும் அவருடன் வந்த 27 வயதான டோட்லா சேஷூ பிரசாத் என்பவரும் சோதனையில் ஈடுபட்ட போலீசாரை பணி செய்ய விடாமல், தகாத வார்த்தையில் திட்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்!!

மேலும் காலால் போலீசாரை எட்டி உதைத்தது தொடர்பாக போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார் . இதுகுறித்து மதுபோதையில் வந்த இளைஞரை பிணையில் விடுவித்தும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியது மேலும் காலால் எட்டி உதைத்தது ஆகிய குற்றத்திற்காக காமினி என்ற பெண்ணுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here