மதுகடை திறப்பு – மகிழ்ச்சியில் மது பிரியர்கள்

0
Closeup of five wineglasses arranged one next to the other, half full with several sorts of wines, red, white and rose wines. Glasses are on the table, there are some papers and pens in background as this was the detail from winetasting. Lit from both sides.

மதுக்கடைகளுக்கு பெயர்போன பாண்டிச்சேரியில் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுகடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தற்போது மது கடைகள் திறந்ததால் மது பிரியர்கள் பூரிப்பில் உள்ளனர்.

மது கடைகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து தீவிரமான ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதன் மூலம் மக்களை கூட்டமாக சேராமல் தனிமைபடுத்தலாம் என ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் தங்களது அத்யாவசிய பொருட்களுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

40 நாட்களுக்கு பிறகு மது கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று பலரும் மது வாங்கிச்சென்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பைகளை எடுத்து வந்து மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர். ஒருவர் உணர்ச்சி மேலீட்டால், மதுபானங்களை கட்டியணைத்து முத்தமிட்டார். ஊரடங்கு காலத்தில் மது இல்லாமல் ஏங்கி தவித்த மது பிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here