பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா?? தமிழக முதல்வர் இன்று ஆலோசனை!!!

0

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி முடியும் நிலையில் ஊரடங்கை நீடிப்பது அல்லது மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்த ஆலோசனையை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ளார்.

அதிகரித்த தொற்று எண்ணிக்கையால் தமிழகத்தில் சென்ற மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகளால் 27 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்தது. எனவே மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யுமாறு தமிழக அரசு சில தளர்வுகளை பின்னர் அறிவித்தது.

மேலும் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் குறைந்த தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21 ஆம் தேதி முடிவடைகிறது. எனவே ஊரடங்கை மேலும் நீடித்து மற்றும் பிற தளர்வுகளை அறிவிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

அறிவிக்கப்படப்போகும் தளர்வுகளில், குறிப்பாக நகர பேருந்துகள் 50% பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பாக்கப்டுகிறது. மேலும் சிறிய ஜவுளி கடைகள் மற்றும் சிறிய வழிபாட்டு தளங்கள் ஆகியவற்றிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here