மதுரையில் கணவனை, மனைவி கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல்:
தற்போதைய சூழ்நிலையில் கள்ளக்காதலால் பல கொலைகள், கொலை முயற்சிகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் அதே கள்ளக்காதல் சம்பவம் நடந்துள்ளது. அதாவது செந்தில்குமார் என்பவர் தனது மனைவி வைஷ்ணவி மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் திருப்பாலை பகுதியில் உள்ள ஜி. ஆர் நகரில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். தனது மகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க பணம் இல்லாத காரணத்தால் செந்தில்குமார் வெளிநாடான மஸ்கட்டில் கடந்த சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த வைஷ்ணவி அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு தினமும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சமீபத்தில் மதுரைக்கு வந்த செந்தில்குமார் இனி வெளிநாட்டுக்கு போக மாட்டேன் என்று வைஷ்ணவியிடம் கூறியுள்ளார். தனது கணவர் இங்கே இருந்தால் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாது என்ற எண்ணத்தில் கூலிப்படைக்கு 15 லட்சம் கொடுத்து செந்தில்குமாரை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கூலிப்படை செந்திலை சரமாரியாக வெட்டி தப்பித்து சென்றனர். அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இவ்வளவு பெரிய அப்டேட்டா? இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்!!
இந்த சம்பவத்திற்கு அவருடைய மனைவி தான் காரணம் என்று காவல்துறை செந்திலிடம் தெரிவிக்க, அதற்கு அவர் என் மனைவி அப்பேற்பட்டவ இல்ல சார்.., நீங்க என்ன சொன்னாலும் வைஷ்ணவி அந்த மாதிரி பன்னிருக்க மாட்டாங்க என்று கூறினார். அதன் பின்னர் ஆடியோவை காவல்துறை போட்டு காட்டினர். அதை கேட்ட செந்தில் தேம்பி தேம்பி அழுவதை பார்த்து அங்கிருந்த காவல்துறை அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது வைஷ்ணவியை காவல்துறை விசாரித்து வருகிறது.