இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் என்று சொல்லப்படும் சூர்யகுமார் ஒரு நாள் போட்டிகளில் விளையாடததற்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது.
சூர்யகுமார்
கடந்த மார்ச் மாதம் இந்திய அணியில் அறிமுகமான சூர்யகுமார் இப்போது வரை 42 T20 போட்டிகளில் விளையாடி 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதன் மூலம் ICC T20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற T20 உலக கோப்பை, நியூசிலாந்திற்கு எதிரான T20 போட்டி என அனைத்திலும் அதிரடி காட்டினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை தொடர்ந்து அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். இதனால் இந்த போட்டியிலும் அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது. அதாவது T20 போட்டிகளில் அதிரடி காட்டியது போல் அவர்கள் ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடியவில்லை.
இந்தியா vs ஆஸ்திரேலியா.., எதிர் அணியை வியந்து பார்க்க வைத்த இந்திய வீரர்!!!
இதற்கு காரணம் என்னவென்றால் T20 போட்டிகளில் விளையாடும் போது கிடைக்கும் சூழல் ஒரு போட்டிகளில் அவருக்கு கிடைக்கவில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனால் இனி வரும் வரும் ஒரு போட்டிகளுக்கு சூர்யகுமார் நன்கு தயாராகி அதிரடி காட்டுவார் என்று தான் தெரிகிறது.