பெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின் பயனை பற்றி பாப்போம்.
நெற்றிசுட்டி
இந்த நெற்றிச்சுட்டி அணிவதால் உடலில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்தும். தலைவலி மற்றும் சைனஸை குணப்படுத்தும். ஆனால் மணப்பெண்ணாக இருக்கும்போது மட்டுமே இந்த நெற்றிச்சுட்டியை அணிகிறோம்.
நெற்றி பொட்டு
நெற்றிக்கு இடையே உள்ள இடம் பொட்டு வைக்கும் இடமாகும். ஆனால் இந்த காலத்தில் போட்டு வைப்பவர்களை பார்க்க முடிவதில்லை. நெற்றிக்கிடையே போட்டு வைத்தால் நியாபக சக்தி அதிகரிக்குமாம். மேலும் சக்திகள் வெளியேறுமல் தடுக்கும். மேலும் பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு எளிதாக மெஸ்மரிசம் செய்ய இயலாதாம்.
தோடு
பெண்கள் தோடு அணிவதில் தனி கவனம் செலுத்துவார்கள். குழந்தை பிறந்தவுடன் 1 வாரத்திற்குள் காது குத்துவார்கள். இதனால் பார்வை வலுப்படும். அதாவது நமது காது துவாரங்களில் கண்கள் சம்மந்தமான நரம்புகள் செல்கின்றனர். எனவே காதில் தோடு அணிவது முக்கியமாகும்.
மூக்குத்தி
மூக்குகளில் நமது குடலுக்கு சம்மந்தப்பட்ட நரம்புகள் உள்ளன. எனவே மூக்கு குத்துவதால் அந்த துவாரங்களில் ஏற்படும் அழுத்தம் குடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. பருவம் அடைந்த பிறகு பெண்களுக்கு மண்டை ஒட்டுப்பகுதியில் சில வாயுக்கள் உருவாகும் இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்குகாக தான் மூக்கில் துளை இடும் பழக்கத்தை அந்த காலத்தில் உருவாக்கியுள்ளனர்.
மோதிரம்
விரல்களில் மோதிரம் அணிவதால் விரலில் இருக்கும் புள்ளிகள் பாலுறுப்பை தூண்டும். மேலும் பதட்டம், மனஅழுத்தத்தை குறைக்கும். மேலும் இதய நோய்கள் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்களை தடுக்க உதவுகிறது.
வளையல்
வளையல்கள் மற்றும் கயிறு அணிவதால் நமது உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் பயம், பதட்டம், போன்றவரை தவிர்க்கிறது. இதனால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.