2022ல் உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் – உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை!!

0

உலக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் இருந்தே மக்களை வாட்டி வதைத்து வரும் நோய் கொரோனா. இந்த நோயில் சிக்கி லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். குறிப்பிட்ட காலத்தில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தொற்று நோய் தற்போது அடுத்தடுத்த அலையாக தொடர்ந்து உயிர் பலி வாங்கி வருகிறது.

ஆனால் தற்போது உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்ததாவது, அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அவர், உலகில் வாழும் 70 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்றும் அதை தொடர்ந்து அனைத்து நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here