திடிரென்று 24 லட்சம் இந்தியர்களின் Whatsapp கணக்கு அதிரடி முடக்கம் – ஏன்.. எதற்கு தெரியுமா?

0
திடிரென்று 24 லட்சம் இந்தியர்களின் Whatsapp கணக்கு அதிரடி முடக்கம் - ஏன்.. எதற்கு தெரியுமா?

வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மட்டும் கிட்டத்தட்ட 24 லட்சம் வாட்ஸ் அப் பயனர்களின் கணக்குகளை நீக்கியுள்ளது.

வாட்ஸ் அப் கணக்கு நீக்கம்:

கடந்த 2006-ம் ஆண்டு வெறும் 55 வேலையாட்களை வைத்து பிரையன் ஆக்டன், ஜேன் கோம் ஆகியோர் தலைமையில் வாட்ஸ் அப் நிறுவனம் நிறுவப்பட்டது. ஒரு தனி நபருடன் அல்லது குழுவுடன் இந்த வாட்ஸ் அப் செயலியின் மூலம் நாம் தகவலை பரிமாறிக்கொள்ளலாம். நாட்கள் செல்ல செல்ல பல மாற்றங்கள் இந்த செயலியில் உட்புகுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 பில்லியன் உலக மக்கள் இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் எக்கசக்க வாட்ஸ் அப் பயனர்களின் கணக்குகளை வாட்சப் நிறுவனம் நீக்கியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையின் படி கடந்த ஜூலை மாதம்  24 லட்சம் வாட்ஸ் அப் பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அந்த பயனர்கள் விதிகளை மீறியதால் அவர்களுடைய வாட்ஸ் அப் கணக்குகளை மொத்தமாக நீக்கியள்ளது வாட்சப் நிறுவனம். மேலும் கடந்த மார்ச் மாதம்  18 லட்சம் வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக புதிய தகவல் தொழில்நுட்பம் விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here