
இந்தியாவில் இளைஞர்கள், பெரியவர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் எண்ணற்றவர்கள் பயன்படுத்தும் “வாட்ஸ்அப்” செயலி, பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் தொடர்பான வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது, வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு நீதிபதிகள் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது புது சிம் கார்டு எண் பயன்படுத்துவதற்காக பழைய சிம்மிற்கு ரீசார்ஜ் செய்யாமல் அநேகமானோர் கைவிடுகின்றனர். இதனால் அந்த சிம் Deactivate செய்யப்பட்டு வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படுவதால், அதை வாங்குபவர்கள் வாட்ஸ்அப் செயலி இன்ஸ்டால் செய்யும் போது, உங்களது chat வரலாற்றை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே பழைய சிம்-ஐ கைவிடும் முன் வாட்ஸ்அப் தரவை முழுமையாக நீக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.