வாட்ஸ் அப் நிறுவனம் தடாலடி… இந்தியாவில் 20 லட்சம் அக்கவுன்ட்டுகள் முடக்கம்.. ஏன் தெரியுமா??

0

வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் 20 லட்சம் சர்ச்சைக்குரிய கணக்குகளை முடங்கியுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.

தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அந்த ஸ்மார்ட் போனில் உள்ள செயலிகளில் வாட்ஸ் அப் செயலி கட்டாயம் இடம் பெற்றுவிடும். உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இந்த வாட்ஸ் அப்பில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் இருக்கின்றனர், குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்...

சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற நிறுவனங்களுக்கு புதிய தொழில்நுட்ப விதிகளை விதித்தது. மேலும் சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் உடன்படுவதாக அறிவித்தனர்.

 

இந்நிலையில், புதிய விதிகளுக்குட்பட்டு கடந்த மே 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை வாட்ஸ்அப் பயனர்களின் இருபது லட்சம் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி உள்ளது. மேலும் தம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் சர்ச்சைக்குரிய 80 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here