பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் நியூ அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப்
உலகமெங்கும் உள்ள பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலில் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கு நம்மால் தகவல்களை பரிமாறி கொள்ள முடிகிறது. அதிகமான மக்கள் பயன்படுத்தும் இந்த செயலியில் நாளுக்கு நாள் புது புது அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் சமீபத்தில் கூட சாட் டிரான்ஸ்பர், whatsapp மீடியா வாயிலாக 100 போட்டோ வரை அனுப்பும் வசதி போன்ற பல்வேறு அப்டேட்களை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வானில் பிறை தென்படாததால் நாளை முதல் ரம்ஜான் நோன்பு., தலைமை காஜூ தகவல்!!!
அதாவது வாட்ஸ் அப்பில் குரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகளை இனி டெஸ்க்டாப் பயனர்கள் மேற்கொள்ளலாம் என சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் டெஸ்க்டாப் பயனர்கள் எட்டு பேருடன் வீடியோ கால், 32 பேருடன் வாய்ஸ் காலும் பேசலாம் என அறிவித்துள்ளனர். இந்த செய்தி இப்போது டெஸ்க்டாப் வாட்ஸ்அப் பயனர்களை குஷிப்படுத்தி உள்ளது.