தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்றும்..நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வானிலை அறிக்கை :

வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது வரை மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த மழையால் தலைநரான சென்னை தத்தளித்து வருகிறது. தற்போது,இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதாவது வடகிழக்கு பருவக்காற்று காரணமாக,இன்றும் நாளையும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இது மட்டுமில்லாமல்,புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பொழியும் என அறிவிக்கபட்டுள்ளது. இது போக தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here