ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மேற்கு வங்க மாநில அரசு உத்தரவு!!

0
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது உள்ள ஊரடங்கு கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 15 வரை தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே நிபுணர்கள் மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படும் என தங்களின் கணிப்புகளை தெரிவித்த நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களில் குறைந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் தொற்று பரவலை தடுக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மே 16 அன்று விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைசியாக ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டது . தற்போது அம்மாநில அரசு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கை அரசு நீடித்து உள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது தொடர்பான உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அரசு கேட்டு கொண்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு வழக்கம் போல இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here