அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது மேற்குவங்க அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க அரசு :
மத்திய அரசு ஊழியர்களுக்கு, விரைவில் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது. இதனை மாநிலங்களிலும் அமல்படுத்த கோரி, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்க அரசு ஊழியர்கள் தங்களுக்கு உடனடியாக டிஏ உயர்வு வழங்க வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
உடனடியாக இந்த போராட்டத்தை விடுத்து, ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் மேற்கு வங்க அரசு சமீபத்தில் எச்சரித்திருந்தது. ஆனால் இதையும் மீறி, மாவட்ட தலைமையகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலக ஊழியர்கள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் பெரும்பாலான அலுவலகங்கள் காலியாக காணப்படுகிறது.
ரஜினி வீட்டில் அப்பவே தரமான சம்பவத்தை செஞ்ச விஜயகாந்த்.., ஆடிப்போன சூப்பர் ஸ்டார்!!
பல அலுவலகத்தில் 50% மேற்பட்ட ஊழியர்கள் வராததால், அன்றாட பணிகள் முழுவதுமாக முடங்கியுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, விரைவில் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் விளைவுகள் மோசமாகும் என மேற்குவங்க அரசு மீண்டும் எச்சரித்துள்ளது.