அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை – அரசின் அசத்தல் திட்டம்..!

0

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறையாக வழங்கப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களும் அரசு விடுமுறையாக வழங்க முடிவு செய்து உள்ளது.

20 லட்சம் பேர் பயன்..!

மகாராஷ்டிரா மாநிலத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அங்கு நடைபெற்ற கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன் படி இந்த இரண்டு நாட்கள் விடுமுறை திட்டமானது வரும் பிப்ரவரி 29, 2020 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதனால் 20 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.

மேலும் இந்த விடுமுறையானது மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது என்பது இன்னும் சிறப்பான விஷயம் ஆகும். அரசு அமைப்புகள், அரசு உதவி பெறும் அமைப்புகள், லோக்கல் பாடிக்கள் போன்ற மகாராஷ்டிராவின் அரசு சார்ந்த எல்லா ஊழியர்களுக்கும் இந்த புதிய விடுமுறை திட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here