தொற்று பரவல் விகிதத்தை கண்காணிக்க மீண்டும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக புனே மாநகராட்சி (மஹாராஷ்ட்ரா) அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியது மராட்டிய மாநிலம் தான். ஆனால் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக அங்கு குறைந்து வருகிறது. மேலும் இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் மஹாராஷ்ட்ராவை கொரோனா மூன்றாம் அலை தாக்கலாம் என்று நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹாராஷ்ட்ராவில் உள்ள புனே மாவட்டத்தில் தொற்று பரவலை கண்காணிக்க வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசியமற்ற பொருட்களை வழங்கும் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல புனேவில் வார இறுதி நாட்களில் மால்கள், சலூன்கள், ரெஸ்டாரன்டுகள், பார்கள் திறக்க அனுமதி இல்லை. ஊரடங்கு விதிகளை மீறும் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புனே மாநகராட்சி எச்சரித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்