கொரோனா பரவல் எதிரொலி – வார இறுதி நாட்களில் பொதுமுடக்கம் அமல்!!

0

நாட்டில் தற்போது மிக அதிக அளவிலான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இதனை கட்டுப்படுத்தும் வகையில் சண்டிகரில் வார இறுதி நாட்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு நேர ஊரடங்கு

இந்தியாவில் கடந்த 2 நாட்களாகவே கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டி வருகிறது. நாட்டில் தற்போது என்னதான் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை குறைப்பது குறித்து நாளை மத்திய அரசு ஆலோசனை நடத்தவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே டெல்லி, பஞ்சாப் போன்ற பகுதியில் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே சுகாதாரத்துறை, மக்கள் அனைவரையும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற அறிவுறுத்தி வருகின்றனர்.

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி?? மதுரை உயர்நீதிமன்ற கிளை!!

இந்நிலையில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் மற்றபடி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here