அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகம், காரைக்கால், புதுச்சேரியில் வரும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை

இன்று முதல் அடுத்து வரவுள்ள ஐந்து நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வரும் ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வட மேற்கு திசையிலிருந்து காற்று தமிழகம் நோக்கி வீசக்கூடும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், கடலூர், சேலம், தருமபுரி, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பு நிலையை விட வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக காணப்படும்.

பவன் கல்யாண் படத்தின் ட்ரைலரை காண அதிரடியில் இறங்கிய ரசிகர்கள் – ட்ரைலருக்கே இப்படியா??

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழையளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 3ஆம் தேதி வரை தென் கிழக்கு வங்கக்கடல், அரபிக்கடல், அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here