அடுத்த நான்கு நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

வானிலை அறிக்கை

கேரளா மற்றும் அதை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஸ்பைசியான “சிக்கன் டிக்கா” ரெசிபி – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் திருச்செந்தூர், திருநெல்வேலி, மணிமுத்தாறு பகுதிகளில் மழை அளவு சென்டி மீட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here