கர்நாடகா மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் இடையேயுள்ள கர்நாடகா மற்றும் கேரளா கடலோரப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று (23-02-2021) மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனம் – மத்திய அரசு திட்டவட்டம்!!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கோத்தகிரி, குன்னூர், அலகாரி எஸ்டேட், சோலையார், பில்மலை எஸ்டேட் பகுதிகளில் 6 சென்டி மீட்டருக்கும் குறைவாக மழை அளவு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களுக்காக எச்சரிப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை.