மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

0
rain

தென் தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

வானிலை அறிக்கை

தென் தமிழக கடலோரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு தென் தமிழக பகுதியான திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘உங்களுக்கு ஒண்ணுன்னா கண்டிப்பா கேட்பேன் மாமா’ – ரொமான்ஸ் சீனில் கலக்கும் கதிர், முல்லை!!

தொடர்ந்து 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here