தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0
rain

இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

வானிலை அறிக்கை

இலங்கைக்கு தென் கிழக்கே 1.5 கிலோமீட்டர் உயரம் வரை காணப்படும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து 20 முதல் 23 வரையுள்ள தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG ஒருநாள் தொடர் – இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here