இன்று முதல் அடுத்து வரவுள்ள நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வானிலை அறிக்கை
தமிழகத்தை பொறுத்தவரை இன்று முதல் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். வெள்ளிக்கிழமை 19ம் தேதி தென் தமிழக மாவட்டங்களின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
புதிய காருடன் “பாரதி கண்ணம்மா” சீரியல் பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!
தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.