தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தின் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அம்பன் புயல் தமிழகத்தின் ஈரப்பதத்தையும் எடுத்துச் சென்று விட்ட காரணத்தால் வட மாவட்டங்களில் அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
மேற்குத்திசை தரை காற்று தொடர்ந்து வீசும் காரணத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பநிலை அளவு அதிகபட்சமாக 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |