காற்று மாறுபாட்டின் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
ஐந்து மாவட்டங்களில் மழை
காற்று மாறுபாட்டின் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து நாளை முதல் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அறிமுகமாகும் 2 முக்கிய பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!!
தமிழகத்தின் மற்ற மாநிலங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரியின் மைலாடி, நாகர்கோவில் பகுதிகளில் மழை அளவு சென்டி மீட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.