இன்று முதல் அடுத்து வரவுள்ள ஐந்து நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
வறண்ட வானிலை
கடந்த இரு தினங்களாக தென் மேற்கு பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சியினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானமழை காணப்பட்டது. மேலும் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கரையோர பகுதிகளிலும் மழையளவு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளிவந்த மதிய நேர தகவலின் படி அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு அதாவது இன்று (24-02-2021) முதல் ஞாயிற்று கிழமை (28-02-2021) வரை தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நடிகர் வடிவேலுவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கும் மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!
சென்னையில் அடுத்த 48 மணி நேரதிற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மழை எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.