தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
வானிலை அறிக்கை
அடுத்த 48 மணி (29/12/2020) நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழையும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
30/12/2020 தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 31/12/2020 தமிழகம்,புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழை எதுவும் பதிவாகவில்லை. டிசம்பர் 28 முதல் 30 வரை வங்கக்கடல் பகுதிகளிலில் குறிப்பாக குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுமென மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் டிசம்பர் 28 அன்றைக்கு தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசுமெனவும் மீனவர்கள் அப்பகுதிகளை செல்ல வேண்டாமெனவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.