தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
rain
rain

தமிழகத்தில் பரவலாக மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 48 (24.09.2020) மணிநேரத்தில் புதுவை மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Raining
Raining

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும் என கூறப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிவலோகம், சித்தார் (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் 6 செமீ, குறைந்தபட்சமாக கூடலூர் (தேனி), சின்னக்கல்லார் (கோவை) ஆகியவற்றில் 2 செமீ மழையும் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலங்களின் தரவரிசை பட்டியல் இதோ!!

கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, கிழக்கு அரபிக்கடல் மற்றும் மஹாராஷ்டிரா, குஜராத் கடலோரப் பகுதிகளில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர். தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 24.09.2020 இரவு 11:30 மணி வரை 3.5 முதல் 3.7 மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here