Thursday, March 28, 2024

தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கு எச்சரிக்கை – சென்னை வானிலை மையம்!!

Must Read

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கனமழை:

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதற்கு வளிமண்டல சுழற்சி தான் காரணம். அதனால் எல்லா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து வீடியோ வெளியிட்ட வழக்கு – ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி.!

weather
weather

இன்றும் வானிலை ஆய்வு மையம் வெப்பச்சலனம் காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்து உள்ளது. சென்னை போன்ற மற்ற மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது. இன்றும் மற்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

பலத்த காற்று தென்மேற்கு, மத்தியமேற்கு மற்றும் அரபி கடல் ஓரங்களில் வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம், என்று அறிவுறுத்தி உள்ளனர். கடலோர பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்து உள்ளனர்.

குறைந்தபட்ச வெப்பம் 27 செல்சியஸ் ஆக இருக்கும் என்றும், பரவலாக வானம் மேகமூட்டத்துடன் காண படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -