11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

0

மன்னர் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!


நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச.8 (நாளை) பாரத் பந்த்!!

நாளை அதிகபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 16 செமீ மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here