தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் சூறாவளி கற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கனமழை:
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்தமிழகத்தில் மற்றும் டெல்டா பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:
தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பம் 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நவம்பர் 1 முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் – மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு!!
சின்னக்கல்லார், மைலாடி பகுதிகளில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது, பெரியார் மற்றும் சோலையூர் பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக குழித்துறை, இரணியல் பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
செப்டம்பர் 22 மற்றும் 23 தேதிகளில் மத்திய மேற்கு வங்க பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.