தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு.., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் சில மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மக்கள் பலரும் அவதிக்குள்ளாகினர். இடை இடையே மழை பெய்து வந்தாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் குறியாமலே இருந்தது. பகல் நேரங்களில் 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெயில் கொளுத்தி வருகிறது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 3(மே 29,30,31) நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், பெரம்பலூர் திருவள்ளூர், விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட அந்த மூன்று நாட்கலில் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் புயலுக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here