தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் விதர்பா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
இன்று (ஏப்ரல் 29) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, கரூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
30.04.2021 முதல் 02.05.2021 வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 03.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைபெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் 3 நாட்களுக்கு இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு அதிகமாக உள்ளதால் காற்றில் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகமாக உணரப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கொரோனா பரவல் எதிரொலி – பக்தர்களின்றி 23 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வைத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!!
அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு அதிகமாக உள்ளதால் மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை. மேலும் கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.