தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 16.04.2021 மற்றும் 17.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதேபோல் 17.04.2021 முதல் 19.04.2021 வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.
முன்னாள் காதலன் பார்த்தசாரதியை சந்திக்கும் சஹானா – பரபரப்பான திருப்பங்களுடன் “இதயத்தை திருடாதே”!!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவில்பட்டி 9 செ.மீ., மஞ்சளாறு, நத்தம் தலா 7 செ.மீ., மதுரை விமான நிலையம் 6 செ.மீ., சாத்தூர், காரியாபட்டி திருமங்கலம், பெருந்துறை தலா 5 செ.மீ., எட்டையபுரம், பெரம்பலூர், விருதுநகர் தலா 4செ.மீ., மருங்காபுரி, மானாமதுரை, பெரியாறு, பெனுகொண்டாபுரம் தலா 3செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று(16.04.2021) தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசாவுள்ளதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.