தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

இன்று(மே 1) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடியே லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 02.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 03.05.2021 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

04.05.2021 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 05.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களை இடி மின்னலுடன் கூடியே லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும்.

ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்பநிலை அதிகபட்சமாக 37 மற்றும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.

அதென்ன கருப்பா இருந்தாலும் அழகா இருக்கேனு சொல்றீங்க, கருப்பு என்ன குறையா?? வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இரணியல் 5, திருமூர்த்தி அணை 4, போடிநாயக்கனூர் 3, திருப்பத்தூர், குழித்துறை, சோத்துப்பாறை தலா 2, டேனிஷ்பேட்டை, கொடைக்கானல் தலா 1 செமீ மழை பதிவாகவுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் 02.05.2021 இரவு 11.30 மணி வரை கடல் அலைகள் உயரம் 1 முதல் 2.5 மீட்டர் வரை உயரும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here