தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் குறித்த முழு தகவலையும் தற்போது தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

இன்று முதல் வருகிற 04.04.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 39 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியாசக இருக்கும். இன்று முதல் வருகிற 04.04.2021 வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு இயல்பை விட அதிகபட்சமாக 5 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும். இதன் காரணமாக சில பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும். மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே சுற்றுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை எந்த பகுதியிலும் பதிவாகவில்லை. மேலும் இன்று மற்றும் நாளை அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசவுள்ளதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்தது.

‘பெண்கள் கண்ணியத்திற்கு குறைவாக நான் பேசவில்லை’ – தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கம்!!

அதேபோல் இன்று வங்காள வளைகுடா பகுதியில் பலத்த காற்று தென்மேற்கு பகுதியில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. மேலும் 01.04.2021 மற்றும் 02.04.2021 அன்று தமிழகம், புதுவை கடலோர பகுதி மற்றும் குமரிக்கடல் மன்னார் வளைகுடா ஆகிய பகுதியில் பலத்த கற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசவுள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here