தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.. உங்க ஊரு இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

0

வெப்பச்சலனம் காரணமாக தமிழ் நாட்டில் குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ் நாட்டிலும் கேரளா மற்றும் கர்நாடகாவிலும்  தற்போது பல பகுதிகளில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

அதை தொடர்ந்து இன்றும் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய நகரங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாளையும் தர்மபுரி, சேலம், கடலூர், நீலகிரி, கோவை, வேலூர், அரியலூர் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here