தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0

மன்னர் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது, இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் லேசான மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிக்கை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி (8.12.2020) நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் (9.10.2020), தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

தமிழகத்தை அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்குமா??

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக திருவண்ணாமலையில் 7 செ.மி மலை பெய்துள்ளது. கடலூர், திண்டுக்கல் மாவட்டத்தில் தலா 6 செ.மீ., பெரம்பலூர், நெய்வேலி, வந்தவாசி, காட்டுமன்னார் கோவிலில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது. திருநெல்வேலி, திருவள்ளுர், கடலூர், மதுரை, வெள்ளுர், திருவாரூர், புதுச்சேரி, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here